பிப்ரவரி 15 ம் திகதி சிவராத்ரி வருகிறது. இந்த சிவராத்ரிக்கு முன்னர் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகம் கிடைக்கும் எனப்படுகின்றது.

இந்த 2026ம் ஆண்டிற்கான சிவராத்திரி பிப்ரவரி 15ம் திகதி ஆரம்பமாகிறது. இந்த மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.

இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது பல மடங்கு அதிக பலனை தரும் எனப்படுகின்றது.

பலரும் இந்த நாளில் விரதமிருந்து சிவனை கண்விழித்து வழிபாடு செய்வார்கள். இப்படி இருக்க ஜோதிடத்தின்படி சில ராசிகள் சிவராத்ரிக்கு முன்னர் சிறந்த பணக்கார யோகத்தை பெறுவார்கள் எனப்படுகின்றது.

சிவராத்திரிக்கு முன் பணக்கார யோகத்தை அள்ளி செல்லும் 4 ராசிகள் | Zodiac Signs That Will Get Rich Before Shivaratri

மேஷம்

  1. மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் பெறுவர்.
  2. நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
  3. தொழில், வணிக முன்னேற்றம் கிடைக்கும்.
  4. சிவராத்ரியின் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  5. திருமணமில்லாதவர்கள் நிச்சயதார்த்தம் செய்யலாம், திருமணமானவர்கள் மகிழ்ச்சி அனுபவிப்பார்கள்.
  6. காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம்  பயத்தை தவிர்த்து கொண்டால் பல வாய்ப்புக்களை பெறலாம்.
  2. வேலை செய்பவர்கள் முக்கிய முடிவுகளை மற்றவர்களின் செல்வாக்கில் உடுக்க கூடாது.
  3. உங்கள் உயர் அதிகாரியிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
  4. வெளிநாட்டு பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதில் ஆலோசனை பெற்று போனால் நல்லது. 
  5. பண வரவு கிடைக்கும். 
  6. வருமான வழிகள் பிறக்கும். 

மிதுனம்

  1. மிதுன ராசிக்காரர்கள் கால கட்டம் தொழில் மற்றும் வணிக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
  2. வேலை, கமிஷன், ஒப்பந்தங்களில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  3. பெரிய திட்டங்கள் கைக்கு வரலாம்.
  4. உங்களுக்கு பிடித்தவர்கள் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு ஆதரவு கிடைக்கும்.
  5. நடுப்பகுதியில் வசதி, ஆடம்பரம் அதிகரிக்கும்.
  6. சொத்து, வாகனம் வாங்கலாம்.
  7. அன்பானவரிடமிருந்து பரிசு கிடைக்கும்.

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழில், வியாபார முன்னேற்ற வாய்ப்புகள் பெறுவர்.
  2. புதிய திட்டங்கள் லாபகரமாக அமையும்.
  3. வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  4. உங்கள் வருமானத்திற்கு ஏற்ற பயணங்கள் நீங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
  5. உங்களால் காதல் மற்றும் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  6. திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல செய்திகள் கிடைக்கும்.