ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பட்டுவருகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை அடக்கி ஆளுவதில் கில்லாடிகளாகவும், யாருக்கும் அடங்காதவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி மற்றவர்களை கட்டுப்படுத்துவதிலும், தலைமைத்துவ குணத்திலும் சிறந்துவிளங்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களை பேச்சாற்றலால் மிரள செய்யும் இவர்கள் யாருக்கும் பணிந்து நடக்க மாட்டார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலைகளையும் தங்களின் தைரியத்தாலும், நிதானத்தாலும் எளிதில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் கலையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் ரகசிய இயல்புக்கும் மர்மான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாரிடமும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அவர்கள் தாங்கள் அக்கறை கொள்ளும் மக்களின் மெய்க்காப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், அவர்கள் உறவுகளையும் கூட கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கின்றார்கள்.
இவர்களின் இந்த குணங்கள் இவர்களை சிறந்த தலைவிகளாக மாற்றுகின்றது.இவர்களின் நடத்தை மற்றவர்களை ஆளுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருக்கும்.
மகரம்
மகரம் ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே கட்டமைக்கப்பட்டவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் வாழ வேண்டும் என்ற இவர்களின் பொறுப்புணர்வு மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இவர்கள் நல்ல பாதையில் வழிநடத்த வேண்டும் என்றே ஆசைப்படுகின்றார்கள்.
மற்றவர்கள் கேட்கும் வகையில் சொல்லும் ஆளுமை கொண்ட இந்த ராசி பெண்கள் எளிதில் தங்களின் திறமையால் மற்றவர்களை தங்களின் அடிமைக்கிவிடுவார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க விரும்பவே மாட்டார்கள்.
