தமிழா தமிழா நிகழ்ச்சியில் கோடை விடுமுறை அச்சத்தில் பெற்றோர்கள் மற்றும் குஷியில் குழந்தைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் | Tamizha Tamizha Summer Holidays Parents Vs Child

 

இந்த வாரத்தில் கோடை விடுமுறை அச்சத்தில் பெற்றோர்கள் மற்றும் குஷியில் குழந்தைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தையும், இதனால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தையும் கூறியுள்ளனர்.

ஆனால் பெற்றோர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்று பிள்ளைகளுக்கு சூடு வைக்கும் செயலையும் செய்துள்ளதைக் கேட்ட தொகுப்பாளர் சற்று கோபத்தில் பேசியுள்ளார்.

சிறுவன் ஒருவன் அலுவலகத்தில் தனது அம்மா ஓவராக சீன் போடுவதாகவும், வீட்டில் அழுக்கு நைட்டியுடன் தான் இருப்பார் என்றும் உண்மையை அவிழ்த்துவிட்டுள்ளான்..