பொதுவாகவே பெரும்பாலானவவர்கள் சுவையாக சாப்பிட வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தை சுவையாக சமையல் செய்ய வேண்டும் என்பதில் காட்டுவது கிடையாது.
இல்லத்தரசிகளும் கூட தினசரி சமையல் செய்து சலிப்படைந்து யாராவது சமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் மிகையாகாது.
அப்படி சுவையாக சாப்பிட பிடிக்கும் ஆனால் அதிக நேரம் செலவிட்டு சமைக்க பிடிக்காது என கூறுபவர்களுக்காகவே வெறும் பத்தே நிமிடத்தில் தயாரிக்க கூடிய ஒரு ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்- தேவையான அளவு
வரமிளகாய் - 5
வெங்காயம்- 2(நறுக்கியது)
பூண்டு- 10 பல்
தக்காளி - 3 (இரண்டாக வெட்டியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தக்காளியில் உள்ள தேலை நீங்கிவிட்டு ஏற்கவே வறுத்து வைத்த வரமிளாயுடன் சேர்த்து, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கைகளாலேயே அழுத்தம் கொடுத்து பிசைந்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான தக்காளி போத்தா தயார்.
