செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.
ஜோதிடத்தின் படி செவ்வாய் கிரகமானது மே மாதம் 11ம் தேதி வரை ரேவதி நட்சத்தில் சஞ்சரிக்கின்றார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன் கிரகமாகும்.
செவ்வாய் கிரகம் மீன ராசியில் பயணித்துவரும் நிலையில், வரும் 11 தேதிக்கு பின்பு தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகின்றார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்பு செவ்வாய் நுழைவதால் சில ராசியினருக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றார். அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளதால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், இதுவரை உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வரும்.
உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வேலைகள் அனைத்தும் முடிவிற்கும் வரும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் 12வது வீட்டில் செவ்வாய் செல்லவிருக்கும் நிலையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதுடன், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பதுடன், கடி உழைப்பிற்கு ஏற்ப பலனையும், அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் நிலையில், நிதி நிலைமையும் மேம்படுகின்றது. அதிகமான பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள், லாபம் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்குமாம்.

சிம்மம்
சிம்மா ராசியினரின் 9வது வீட்டில் செவ்வாய் செல்லும் நிலையில், தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவாகவும், ஒவ்வொரு வேலையிலும் வெற்றியும் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறுவீர்கள்.
சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பதுடன், கடின உழைப்பிற்கான பலனும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டும், நிதிநிலையும் படிபடியாக உயர்கின்றது.

தனுசு
தனுசு ராசியினரின் ஐந்தாம் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ள நிலையில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், குடும்பத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றது.
சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் நல்ல பலன்களை பெறுவார்கள்.

