முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார் அப்போது அவருடன் வந்த இளஞைன் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு சென்றார். அவருக்கு அங்கு சிறந்த வரவேற்பு கொடுக்கபட்டது. 

காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருந்தார்ஃ 

இப்படி இருக்க முதலமைச்சர் விஜய்யுடன் எப்போதும் இருக்கும் இளைஞன் யார் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. 

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

இளைஞன் யார்?

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணத்தின் போது அவருடன் சென்றவர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. 

அதில் இருக்கும் ஜெகதீஷ் எனும் இளைஞன் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்த ஜெகதீஷ் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட். பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் இவரும் உடன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வின் போது விஜய்க்கு சிகை அலங்காரம் செய்தது இவர் தான். இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு ஜெகதீஷ் அஸ்வதி பேட்டி கொடுத்துள்ளார். 

 அதில் அவர் பேசியதாவது  "எனக்கு 10ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசை.

விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா? | Who This Young Man Accompanied Chief M Vijay

 

இதற்கான படிப்புகளை முடித்து சலூன்களில் வேலை பார்த்து, முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிறகு மெல்ல மெல்ல என்னைப் பற்றிய தகவல் பரவியது.

அப்படி 'பிகில்' திரைப்படத்தின் போது விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அதன்பின் 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'வாரிசு', 'லியோ', 'தி கோட்' மற்றும் இன்னும் வெளியாகாத 'ஜன நாயகன்' உள்ளிட்ட விஜய்யின் அனைத்து திரைப்படங்களிலும் இந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.

'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்த தருணம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது விஜய் சார் என்னிடம், "வெல்டன் தம்பி!" என்று கூறி என்னை பாராட்டினார். அந்த தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது." என்று கூறி உள்ளார்.