இதையடுத்து, நர்சு நாகேஷ்வரியே சித்தம்மாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதற்காக ஆஸ்பத்திரி ஊழியர்கள், தன்னுடைய செல்போன் என ஒட்டுமொத்தமாக 4 செல்போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்துவிட்டு, அந்த வெளிச்சத்தில் சித்தம்மாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் மறுநாள் (11-ம் தேதி) அதிகாலை 4 மணியளவில் சித்தம்மாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பெண்ணுக்கு வெற்றிகரமாக செல்போன்களின் டார்ச் லைட் மூலமாக பிரசவம் பார்த்த நர்சு நாகேஷ்வரிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கலபுரகி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குடும்ப நலத்துறை ராஜேஸ்வரியும், நர்சு நாகேஷ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.