ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு அதிகமாக கொரோனா அச்சுறுத்தலினால் பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக உஸ்னமான காலநிலை இருந்துள்ளது.

இதனால் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.