தமிழில் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. இவர் நடிப்பில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் கணிசமான இள வட்டங்களை சீரியலை நோக்கி திருப்பியது. 

இந்த சீரியல் கடந்த சுமார் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் யப்பா சாமி எப்போதான் இந்த சீரியல் முடியும் என்று ரசிகர்கல கடுப்பாகும் அளவுக்கு சென்றது இந்த சீரியல். 

இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகை ரச்சிதா தமிழ் சீரியல் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

 

பார்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பது தான் இவரது கூடுதல் பலம்.இவர் ‘உப்புக்கருவாடு’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவருக்ககு என தனி ரசிகர் வட்டம் உள்ளது. 

இந்நிலையில் நடிகை ரச்சிதா அடுத்த சீரியலில் எப்போது நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 பாகத்தில் ரச்சிதா ஹீரோயின் ரோலில் நடிப்பது உறுதியானது. 

இணையத்தில் சுட்டியாக துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்க கூடாதா என்று வழிசல் கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.