மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மாங்கேணி பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து தோப்பூர் பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் இன்று முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாகரை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதியான காத்தான்குடி சாவியா வீதியை சேர்ந்த முஹம்மது கனீபா முஹம்மது இர்பான் (வயது – 31) என்பவர் உயிர் இழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி அப்துல் ரஹ்மான் லத்தீப் (வயது – 54) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணமடைந்தவரின் சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி - மற்றுமொருவர் வைத்தியசாலையில்
- Master Admin
- 09 June 2020
- (553)

தொடர்புடைய செய்திகள்
- 23 October 2024
- (131)
குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரி...
- 17 March 2021
- (849)
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது நடைம...
- 07 February 2024
- (276)
இனி கூகுள் பே மூலமாக ரூ.20000 கடன் வாங்க...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.