உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பேரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் நேற்று (07) உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆசாத் என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவரின் தாயாரான அலியார் லதீபா பிவி என்பர்வர் கைது செய்யப்பட்டர்.
அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்
இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று (07) எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத காரணத்தையிட்டு மை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் அவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்
- Master Admin
- 08 December 2020
- (510)

தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (447)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின...
- 16 November 2020
- (443)
கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது
- 19 September 2024
- (279)
குரு நட்சத்திர பெயர்ச்சி... ராஜயோகத்தை ப...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.