மஹர சிறைச்சாலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இன்றையதினம் (09) மீண்டும் அழைக்கப்பட உள்ளது.
நேற்றைய தினம் (08) குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் விசேட நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்படவேண்டும் என நேற்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி குறித்த சமர்ப்பணங்கள் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 7 பேரின் அடையாளம் தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 165 பேருக்கும் அதிகமானோரிடம் இடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களிடம் இடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மஹர சிறை சம்பவம் தொடர்பில் 165 பேரிடம் வாக்குமூலம் பதிவு
- Master Admin
- 09 December 2020
- (365)

தொடர்புடைய செய்திகள்
- 04 April 2024
- (681)
இந்த திகதிகளில் பிறந்தவர்களை வெற்றி தேடி...
- 30 March 2024
- (304)
செவ்வாழை ஆண்மை குறைபாட்டை போக்குமா.. இத்...
- 10 May 2024
- (358)
புதன் பெயர்ச்சி பலன்கள்: இன்று முதல் பணம...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.