மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டி பாறையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி என்ற போதும்பொண்ணு (வயது 20). நேற்று அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கி இருந்த நீரில் இவருடைய ஆடு விழுந்தது. 

அதை மீட்க இவர் தண்ணீரில் இறங்கிய போது நீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.