இலங்கையை சர்வதேச விமான பயணங்களுக்காக மீண்டும் திறக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
அதன்படி, வணிக மற்றும் விசேட விமான சேவைகளை முதலில் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் பின்னர் வௌியிடப்படவுள்ளன.
அதேபோல், சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பது தொடர்பிலான நிரந்தர திகதி எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறக்கப்படும் திகதி!
- Master Admin
- 13 December 2020
- (729)

தொடர்புடைய செய்திகள்
- 28 June 2025
- (245)
குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு...
- 10 August 2024
- (348)
சிம்மத்தில் 2 ராஜயோகங்களை உருவாக்கும் சூ...
- 16 February 2021
- (444)
முழு முகக்கவசம் அணிபவர்களுக்கான சலுகை
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.