இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி்த்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது மொத்தமாக 991 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆகக் காணப்படுவதுடன் வைத்தியசாலையில் 423 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.