பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை, சரணபால மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு பேர் கொலை!
- Master Admin
- 21 December 2020
- (471)

தொடர்புடைய செய்திகள்
- 06 December 2020
- (754)
கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொ...
- 23 March 2021
- (530)
நகரில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும்...
- 08 June 2025
- (123)
சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழ...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.