புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 57). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்தரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
- Master Admin
- 22 December 2020
- (542)

தொடர்புடைய செய்திகள்
- 01 July 2020
- (539)
சாத்தான்குளம் விவகாரம்.. முதல் முறையாக ர...
- 07 December 2020
- (447)
மணமகளுக்கு கொரோனா - பாதுகாப்பு உடையுடன்...
- 09 February 2021
- (933)
4 மாதம் கர்ப்பமாக இருந்துகொண்டு 6 வயது ம...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.