புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாதிரிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் திவ்யா (வயது 17). இவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 25-ந் தேதி காலை திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த திவ்யா வெந்நீர் வைக்க விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளார். சரியாக நெருப்பு எரியாததால் கேனில் இருந்த மண்எண்ணெயை தீயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் திவ்யாவின் உடல் மீது தீப்பற்றிக் கொண்டதில், அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.