கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே சேலமட்டம் அருகில் பரபர்த்தகுடியை சேர்ந்தவர் பிஜூ. மனைவி அம்பிளி (39), மகள் ஆதித்யா (15), மகன் அர்ஜூன் (13). ஆகியோருடன் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.


பிஜூ பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியினர் பலர் சீட்டு போட்டிருந்தனர். இந்த நிலையில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களிடம் பணத்தை விரைவில் தந்து விடுவதாக கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிஜூ அவரது மனைவி 2 குழந்தைகள் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் வீட்டில் கிடந்தனர்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் ஏலச்சீட்டு நடத்தியதில் பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.