லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தமைக்கு அமெரிக்கா,  ஜெர்மன் ஆகிய  நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் டுவிட்டரில் குறிப்பிடுகையில்,  கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த தைரியமிக்க வீரர்கள் எப்போதும் மறக்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை,  அமெரிக்க தூதரகம் தெரிவித்து கொள்கிறது. அவர்களின் தைரியம் மற்றும் வீரம் என்றும் நினைவில் கொள்ளப்படும்” எனத்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ. லின்டர் கூறுகையில், “கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.