கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் சூழலைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் டேவிட் ஸ்டில்வெல் குற்றம் சாட்டியுள்ளாா். தொலைபேசி வாயிலாக செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இச்சூழலில் எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எளிதில் தீா்வு கண்டுவிடலாமென சீனா கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய எல்லைப் பகுதியில் இராணுவத்தினருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களை அடைந்துவிடலாம் என்று சீனா எண்ணி வருகிறது. இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல அண்டை நாடுகளுடன் எல்லை தொடா்பாக சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதேவேளை இந்திய - சீன எல்லையில் நிலவி வரும் போர்ச்சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்லரசுகளை கொரோனாவால் திணறடித்து சூட்சுமமாக காய் நகர்த்தும் சீனா!
- Master Admin
- 20 June 2020
- (501)

தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (508)
அமெரிக்காவில் ஆச்சரியப்பட வைத்த பெண் - 2...
- 12 June 2024
- (766)
இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரப...
- 10 February 2021
- (503)
அமீரகம் வரலாற்று சாதனை - 7 மாதங்களுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.