கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் சூழலைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் டேவிட் ஸ்டில்வெல் குற்றம் சாட்டியுள்ளாா். தொலைபேசி வாயிலாக செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இச்சூழலில் எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எளிதில் தீா்வு கண்டுவிடலாமென சீனா கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய எல்லைப் பகுதியில் இராணுவத்தினருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களை அடைந்துவிடலாம் என்று சீனா எண்ணி வருகிறது. இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல அண்டை நாடுகளுடன் எல்லை தொடா்பாக சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதேவேளை இந்திய - சீன எல்லையில் நிலவி வரும் போர்ச்சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்லரசுகளை கொரோனாவால் திணறடித்து சூட்சுமமாக காய் நகர்த்தும் சீனா!
- Master Admin
- 20 June 2020
- (602)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2023
- (419)
ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தி...
- 12 December 2020
- (523)
சுவிச்சர்லாந்தில் இயற்கையாக உருவான பனிக்...
- 08 January 2021
- (762)
127 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 20 July 2026
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
