பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமைச்சில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்தும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு திறந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கடந்த வாரம் சுகாதார அமைச்சில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதோடு அவர்களுடன் தொடர்புடைய 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.