சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக யோகா தினம் அமைந்துள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் இருந்தே யோகா தினத்தை அனுஷ்டிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
யோகா தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்யுங்கள்.
உங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகா பழகுங்கள். உலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய தினம்
யோகாவிற்கு மதம், மொழி, இனம் என்ற எந்த பேதம் இல்லை. யோகாவின் பயன்களை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு உணர்ந்துள்ளது.
கொரோனாவை வீழ்த்த யோக சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்.
உடல் வலிமையுடன் மன வலிமையையும் தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகவைப் பற்றி கூறியுள்ளார்” என இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.