இங்கிலாந்திலுள்ள பூங்காவொன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ரீடிங் பகுதியைச் சேர்ந்த பிரஜையான 25 வயதுடைய நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இல்லை என்றும் குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.