திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் யோகான்(25). இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி யேசுவா(23). இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். இந்நிலையில், நேற்று மாலை கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்த யேசுவாவை, யோகான் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யேசுவா தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகானை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே யோகான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதுகுறித்து, வெங்கடேசன் கொடுத்த தகவலின்பேரில் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யோகான் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யேசுவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்த தம்பி, அண்ணனை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணன் வெட்டிக் கொலை: கஞ்சா போதையில் தம்பி வெறிச்செயல்
- Master Admin
- 02 February 2021
- (422)

தொடர்புடைய செய்திகள்
- 11 February 2021
- (915)
91 மாணவர்களுக்கு கொரோனா - டியூஷன் சென்ட...
- 30 April 2021
- (402)
தீவுத்திடலில் கொரோனா பரிசோதனை மையம்- 24...
- 29 June 2020
- (440)
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் இலட்சக்கணக...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.