தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 30 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் தமிழகம்
- Master Admin
- 04 May 2020
- (603)
தொடர்புடைய செய்திகள்
- 25 May 2021
- (932)
அதிதீவிர புயலாக மாறும் ‘யாஸ்’- மஞ்சள் எ...
- 15 January 2021
- (1332)
3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானி...
- 16 February 2021
- (743)
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி
யாழ் ஓசை செய்திகள்
தமிழர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்
- 20 January 2026
பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
- 20 January 2026
மீன்பிடிக்கச் சென்ற இருவர் கடலில் மாயம் ; தேடுதல் தீவிரம்
- 20 January 2026
இ.போ. ச. சாரதிக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறைத்தண்டனை
- 20 January 2026
சினிமா செய்திகள்
மீண்டும் கர்ப்பமான அட்லீ மனைவி பிரியா!! பேபி பம்ப் போட்டோஷூட்..
- 20 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
