தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 30 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் தமிழகம்
- Master Admin
- 04 May 2020
- (669)
தொடர்புடைய செய்திகள்
- 01 January 2021
- (560)
மனைவி, 2 குழந்தைகளுடன் வாலிபர் தற்கொலை
- 22 April 2021
- (580)
ஒரே நாளில் 2,102 பேர் பலி - 3 இலட்சம் பே...
- 24 July 2026
- (114)
வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்...
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
- 10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
- 08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
