அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

; எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அவர், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம், அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.