நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக தோற்றிய மாணவர்களின் வருகை திருப்பதிகரமாக அமைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விடேச பரீட்சை மத்திய நிலையத்தில் 38 பேர் பரீட்சைக்கு தோற்றியிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களினால் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இன்று குறிப்பிட்ட படி ஆரம்பமான இந்த பரீட்சை 4513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இன்றைய காலநிலைக்கு மத்தியில் மாணவர்கள் குறிப்பிட்ட வகையில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். இங்கு 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை நோக்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரப் பரீட்சை - மாணவர்களின் வருகை திருப்தி
- Master Admin
- 01 March 2021
- (430)

தொடர்புடைய செய்திகள்
- 19 May 2025
- (170)
குரு பகவானின் பார்வை பட்டு ராஜ வாழ்க்கைய...
- 01 March 2021
- (475)
நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து த...
- 22 July 2023
- (271)
ஆக்ஷனில் பூனையை ஓரங்கட்டிய நாய் - மிரண்ட...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.