பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஒட்டி சுட்டான் பொலிஸரினால் குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸாரினாலும் அதற்கு முன்பு கிளிநொச்சி பொலிஸாரினாலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.