கொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி 167 பேருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று (03) மாலை கிடைக்கப்பெற்ற போதே மேற்படி 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை நகரப்பகுதியில் 10 பேர், தர்மபுரத்தில் 05 பேர் மற்றும் யதன்சைட் பகுதியில் ஒருவருமாக 16 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் கொட்டகலை பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளின் ஐந்து ஆசிரியர்களும் 07 மாணவர்களும் அடங்குவதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்.
மேலும் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா
- Master Admin
- 04 March 2021
- (886)
தொடர்புடைய செய்திகள்
- 26 April 2025
- (323)
இந்த ராசியினருடன் ஒரு முறை பழகிவிட்டால்...
- 24 February 2025
- (191)
"மொய்ப்பணம்" வைக்கும்போது, 1 ரூபாய் சேர்...
- 19 June 2020
- (510)
ஸ்ரீலங்காவின் அந்நிய செலாவணி தொடர்பில் ப...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
