சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் NBC இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் உட்பட 33 பேரை NBC இன்று பெயரிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் ரியா சக்ரபோர்த்தி ஒரு "போதை மருந்து சிண்டிகேட்" இன் ஒரு பகுதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், அவர் தான் சுகத்துக்கு போதை பொருள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏறக்குறைய 12,000 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் திரு ராஜ்புத் (34) இறந்ததைத் தொடர்ந்து NBC விசாரணையைத் தொடங்கியது. இது போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் இருவரையும் கைது செய்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட 33 பேரில், எட்டு பேர் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளனர், ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் உட்பட மீதமுள்ளவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

விசாரணையின் போது, ​​பல பொருட்கள், மின்னணு கேஜெட்டுகள் மற்றும் இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் இயற்கையில் போதைப்பொருள் என்பதை சோதனைகள் உறுதி செய்கின்றன என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சான்றுகள், அழைப்பு பதிவுகள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், location tags, வீடியோ மற்றும் குரல் பதிவுகள் மற்றும் பல ஆவணங்களை உள்ளடக்கிய ஆதாரங்களை குற்றவாளிகள் சமர்ப்பித்ததாகவும் NBS கூறியுள்ளது.

தீபிகா படுகோன், ஃபிரோஸ் நதியாட்வாலா, மற்றும் ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.