கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று 932 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,61,204 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,397 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 429 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,39,928 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 8,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.