எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், நாடு முழுவதிலும் பகல் வேளையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

ஆனாலும், இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.