கொட்டாஞ்சேனையில் உள்ள, வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் மற்றும் திருடப்பட்ட மருந்தினை வாங்கிய மருந்தகத்தை சேர்ந்தவர் ஆகியோரே வைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்ளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மருந்துகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதுடன், குறித்த மருந்துகள் ஜம்பட்டா பகுதியில் உள்ள மருந்தகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.