உலகின் பல்வேறு நாடுகளில் இன்றளவும் கூட, அரச குடும்பங்களுக்கு என்று தனி மரியாதை உள்ளது. அவர்களுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது.
அவர்கள் எந்த ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட, அது அந்த நாட்டு ஊடகத்தின் தலைப்பு செய்தியாக மாறிவிடும்.
அவர்களுக்கு என்று ஒரு அந்தஸ்து, பட்டங்கள், பதவிகள் என்று இருந்தாலும், அவர்களுக்கு எப்படி வருமான கிடைக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
- எந்த ஒரு நாட்டின் அரச குடும்பமாக இருந்தாலும், அவர்களுக்கு நாட்டு மக்களின் வரிப் பணம் பெருமளவில் வருமானத்தை பெற்றுத்தருகிறது.
- குறிப்பாக அரச குடும்பங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் மூலம், அவர்களுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- இப்போது பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர், அதன் மூலம் அவர்களுக்கு தேவையான் பணம் கிடைக்கிறது.
- துபாய் இளவரசர் முதல் புருனே சுல்தான் வரை பல அரச குடும்பங்கள் மத்திய கிழக்கில் எண்ணெய் வளங்களில் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான வருமானம் கிடைக்கிறது.
- தற்போதைய காலக்கட்டத்தில் நிலம் என்பது சிறந்த முதலீடு, ஆனால் அரச குடும்பத்தினருக்கு சாதரணமாக ஏராளமான நிலங்கள் இருப்பதால், அதில் அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைப்பதுண்டு.
- அரச குடும்பங்களின் உறுப்பினர்கள் எழுதிய புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே வேறு, அந்த புத்தம் மூலம் அவர்களுக்கு தனி வருமான கிடைக்கும்.
- அரச குடும்பங்களின் அரண்மனைகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள், அங்கிருக்கும் ஏதேனும் ஒரு பொருளை வாங்க ஆசைப்படுவர், அப்படி வாங்கப்படும் அந்த பொருட்களுக்கான வருமானம் அரச குடும்பத்திற்கே சேரும்.