மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (24) இரவு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்றிரவு 8 மணியளவில் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை விசேட புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்ட போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 41 வயதுடைய கஞ்சா வியாபாரியை கைது செய்ததுடன் 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்
இதன்போது கைது செய்யப்பட்டவரை மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 25 March 2021
- (462)

தொடர்புடைய செய்திகள்
- 18 March 2021
- (492)
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
- 16 March 2025
- (220)
ஆண்களை காந்தம் போல் ஈர்க்கும் பெண் ராசி...
- 24 March 2024
- (298)
ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை மு...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.