யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இருவர், தாதியர்கள் மூவர் உட்பட நிரந்தர பணியாளர்கள் 9 பேரும் மருத்துவ பீட மாணவர்கள் இருவர் தாதிய மாணவர் ஒருவரும் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவரும் என 13 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உயர்மட்டக் கூட்டம் இன்றிரவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேற்படி வலியுறுத்தினார்.
போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும்.
கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்.
போதனா வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
- Master Admin
- 27 March 2021
- (625)

தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (90)
ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியின...
- 09 June 2025
- (64)
குரு புதன் சூரியன் மகா கூட்டணி ; ராஜயோகம...
- 16 December 2024
- (222)
2025 ஆம் ஆண்டில் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை பெ...
யாழ் ஓசை செய்திகள்
கணவனின் கொடூர தாக்குதலுக்கு பலியாகிய மனைவி!
- 09 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.