குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். 

இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

கொரன்டிக்குளத்தில் இன்று (02) மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். 

குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.