குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். 

இராகலை, சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

கொரண்டிக் குளத்தில் இன்று (02) மதியம் நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளான் 

பின்னர் நீரிழ் மூழ்கிய சிறுவனை பிரதேச மக்களும் பொலிஸாரும் கடும் பிரயதனத்தின் பின்னர் மீட்டனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.