சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் இன்றைய தினம் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அரச விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இன்று வங்கிகள் மற்றும் போக்குவரத்து திணைக்களம் போன்றவை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.