ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்றைய தினம் (19) மூன்று இடங்களில் ரயிலில் மோதி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பூஸ்ஸ மற்றும் கிங்தொட இடையேயான ரயில் பாதையில் 60 வயது நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, புத்தளம் பகுதியில் இருந்து கொழும்புக்கு பயணித்த ரயிலில் மோதி 71 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், ஹபராதுவை பொலிஸ் பிரிவின் தல்பே, மிஹீரிபென்ன பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதி மூன்று பேர் பலி!
- Master Admin
- 19 April 2021
- (500)

தொடர்புடைய செய்திகள்
- 11 May 2025
- (211)
தொண்டையில் கட்டியிருக்கும் சளியை உடனடியா...
- 25 January 2024
- (409)
அதிர்ஷ்டத்தை பெற வீட்டில் பாம்பு செடியை...
- 19 June 2020
- (481)
ஆஸியில் சிக்கியிருந்த மேலும் 98 இலங்கையர...
யாழ் ஓசை செய்திகள்
முடிவுக்கு வந்த கொள்கலன் நெரிசல்
- 29 June 2025
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை
- 29 June 2025
போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி
- 29 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.