வவுனியாவில் கடந்த வாரம் பொலிஸார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை பொலிஸார் என கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் எனக்கூறி 30 பவுண் தங்க நகை கொள்ளை - மூவர் கைது!
- Master Admin
- 06 May 2021
- (529)

தொடர்புடைய செய்திகள்
- 20 November 2024
- (157)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மை...
- 22 October 2023
- (248)
ஐஸ்கிரீம் பிரியரா நீங்க... அப்போ இத பார்...
- 26 April 2025
- (300)
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 ப...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.