தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி. உளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 

சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக(நிர்வாகம்) எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை(உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

 உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.