கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 31 வயது மென்பொருள் பொறியாளர் செல்சியாவில் உள்ள கூகுள் தலைமையக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

14 வது மாடியின் திறந்தவெளி மொட்டை மாடியின் விளிம்பில் அவரது கைரேகைகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் கூகுள் மென் பொறியியலாளரான ஜேக்கப் பிராட்(33) மன்ஹாட்டன் தலைமையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 16 ம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு மென்பொருள் பொறியாளர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து நியூயோர்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.