சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். இவரின் கொள்ளைகளை கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
இன்றைய அவசர உலகத்தில் பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், சாணக்கிய நீதியின் படி பணத்தை குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கீழே கூறப்படும் நீதியை நீங்கள் பின்பற்றி வந்தால் பணக்கஷ்டம் என்பது வரவே வராதாம்.
பணகஷ்டத்தை தடுக்கும் 6 விஷயங்கள்
- பணத்தை தண்ணீர் போன்று செலவழிப்பவர்கள் மற்றும் சோமிக்காமல் இருப்பவர்களை முட்டாள் என்று அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் மோஷமான காலக்கட்டத்தில் துன்பங்களை சந்திப்பார்கள். மேலும் பணம் இருப்பதால் ஆடம்பர வாழ்க்கைக்கு பணத்தை யோசிக்காமல் செலவழிப்பதும் நல்லதல்ல.
- தீய செயல்களால் பணத்தை சம்பாதிக்காமலும், பணத்திற்கு அடிமையாகவும் இருக்கக்கூடாது. வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் உள்ள இடங்களை தெரிவு செய்து வாழ்ந்தால், குறித்த நபர் நிச்சயம் பணத்தை எளிதில் சம்பாதிக்க முடியும்.
- வழிதவறி, குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பணத்தின் ஆயுட்காலம் என்பது 10 ஆண்டுகள் தானாம். 11வது ஆண்டில் நீங்கள் சேர்த்து வைத்த செல்வம் அழியத்தொடங்கிவிடும். இதனால் உங்களது நிம்மதியும் அழிந்துவிடும்.
- பணம் அதிகம் சம்பாதித்தாலும் மற்றவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மரியாதை கொடுக்காமல் இருப்பவர்களும் வாழ்க்கையில் நன்றாக வாழ முடியாதாம்.
- வீட்டில் அதிகமான சண்டை இருந்தால், லட்சுமி தேவி வீட்டைவிட்டு வெளியேறிவிடுவாராம். ஆதலால் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- பணத்தை சம்பாதித்த பின்பு தற்பெருமை, பண ஆசை, பணத்தில் மோகம் இவை இருக்கவே கூடாது. இவ்வாறு ஆணவத்துடன் பெருமை கொள்கிறவர்கள் கையிலிருந்து பணம் விரைவில் கரையும்.