பொதுவாக தற்போது அதிகமாக பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் பார்க்கப்படுகின்றது.

மார்பக புற்றுநோய் மார்பக செல்களில் தொடங்குகிறது. இதனால் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக தாக்கும்.

நோய் வந்தவுடன் சரிச் செய்ய வேண்டும். நாட்கள் செல்ல செல்ல மற்ற பாகங்களையும் தாக்க ஆரம்பித்து விடுகின்றது.

இதன் ஆரம்ப அறிகுறிகளை பரிசோதனை செய்வதற்கு மேமோகிராபி போன்ற அம்சங்கள் தேவைப்படுகின்றது.

என்னது மார்பக புற்றுநோய் பரம்பரை நோயா?அந்த வகையில் மரபியல் காரணங்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகிய காரணங்கள் மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதிலும் முக்கிய காரணம் என்னவென்றால், குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் தாக்கம் இருந்தால் அது பரம்பரைக்கும் வாயிலாக இன்னொரு நபருக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

இதன்படி, மார்ப்பக புற்றுநோய் பரம்பரை வாயிலாக வருமா? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

என்னது மார்பக புற்றுநோய் பரம்பரை நோயா?

பிஆர்சிஏ1 மற்றும் பிஆர்சிஏ2 ஆகிய மரபணுக்கள் மார்ப்பக கட்டிகளை சரிச் செய்து சேதமடைந்த டி. என். ஏவை மீண்டெழ வைக்கும்.

மேற்குறிப்பிட்ட மரபணுக்களில் ஏதாவது பிறழ்வுகள் ஏற்படுமாயின் அது மார்பக புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. இதுவே காலப்போக்கில் மார்ப்பக புற்றுநோயாக மாறுகின்றது.

என்னது மார்பக புற்றுநோய் பரம்பரை நோயா?

குழந்தையின் பெற்றார்களில் யாராவது ஒருவருக்கு BRCA1 அல்லது BRCA2 போன்ற பிறழ்வுகள் இருந்தால் அது குழந்தைக்கு கடத்தப்பட்டு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக மாறுகின்றது. இது 50சதவீதம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

என்னது மார்பக புற்றுநோய் பரம்பரை நோயா?

பரம்பரை மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் இருக்கும் குடும்பத்தினர் இளம் வயதிலேயே மரபணு பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. இது BRCA பிறழ்வுகளை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும்.

முக்கிய குறிப்பு

அறிகுறிகள் காணப்படுமாயின் உரிய மருத்துவ சிகிச்சையை பெறுவது நல்லது......