பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும்.

அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டில் சில பொருட்களை வைக்கவே கூடாது என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க... இந்த பிரச்சினைகள் ஏற்படும் | Why You Should Never Keep Broken Mirror

இதில் உடைந்த கண்ணாடி முக்கிய இடம் வகிக்கின்றது. வீட்டில் உள்ள கண்ணாடி, ஜன்னல், கதவு கண்ணாடி அல்லது கண்ணாடி பாத்திரங்கள் போன்ற ஏதேனும் கண்ணாடிகள் உடைந்தால், அவற்றை உடனடியாக வீட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என வாஸ்து சாஸ்த்திரம் குறிப்பிடுகின்றது.

நீங்கள் வீட்டில் அத்தகைய கண்ணாடியை வைத்திருந்தால், உங்கள் முன்னேற்றம் தடைப்பட்டு, உங்கள் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம், உங்கள் உடல்நலம் மோசமடையலாம் அல்லது பண வரவு தடைப்படும்.

உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க... இந்த பிரச்சினைகள் ஏற்படும் | Why You Should Never Keep Broken Mirror

 வீட்டின் ஜன்னல்கள், கதவுகளில் திடீரென கண்ணாடி உடைந்தாலோ அல்லது விரிசல் ஏற்பட்டாலோ, எதிர்காலத்தில் நீங்கள் சில பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிகுறியை வெளிப்படுத்துகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

மேலும் வீட்டில்  கண்ணாடி உடைந்தால், உடனடியாக அதை அகற்றி, வீட்டிற்கு வெளியே யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் போட வேண்டும்.

உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க... இந்த பிரச்சினைகள் ஏற்படும் | Why You Should Never Keep Broken Mirror

இதேபோல், ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் உடைந்திருந்தால் உடனடியாக புதிய கண்ணாடியை மாற்ற வேண்டும்.வாஸ்து படி, ஒரு கண்ணாடி உடைந்தால், அதில் உங்கள் பிரதிபலிப்பைப் பார்க்கக் கூடாது. கெட்ட சகுனங்களைத் தவிர்க்க, ஒரு நபர் தனது பிரதிபலிப்பைப் புனித குளத்தில் பார்க்க வேண்டும்.

வீட்டில் ஏதேனும் கண்ணாடி பொருள்  திடீரென உடைந்தால், அது எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வின் அறிகுறியாக இருக்கலாம்.இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்து சாத்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றது.