இயக்குனர் லிங்குசாமி தான் கத்துக்கிட்ட மொத்த சரக்கையும் இறக்கிய படம் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸின்போது பேட்டி அளித்த நிலையில் அந்த படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளி வந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’அஞ்சான்’. இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஓரளவு நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், ரிலீசுக்கு முன் லிங்குசாமி பேசிய அளவுக்கு இல்லை என்றும் குறிப்பாக ’நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கி இருக்கிறேன்’ என்று அவர் கொடுத்த பில்டப் பேட்டி படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவின் நண்பராக வித்யூத் ஜாம்வால் நடித்திருப்பார் என்பதும் அவரது கேரக்டர் தான் படத்தின் ஹீரோ போன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யா அதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு அவரது கேரக்டரை டம்மியாக்க கூறியதால் அந்த கேரக்டர் கொல்லப்பட்டதாகவும் அதனால்தான் இந்த படம் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இதே வித்யூத் ஜாம்வால் தான் ’துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்திருப்பார் என்பதும் கடைசி வரை அவர் அந்த படத்தில் இருப்பார் என்பதால் தான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ’அஞ்சான்’ படத்தை மீண்டும் எடிட் செய்து அரை மணி நேரம் காட்சியை குறைத்து இருப்பதாகவும் தற்போது ட்ரீம் செய்யப்பட்ட பின்னர் அஞ்சான் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் லிங்குசாமி தெரிவித்துள்ளார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை ரீ ரிலீஸ் ஆன பின்னர் பார்ப்போம்.