ஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த நபருக்கு கல் ஒன்று பார்சலில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத் பகுதியில் உள்ள நபர் ஒருவர் பிளிப்கார்ட் செயலி மூலம், ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்துள்ளார்.

அதே நாளில் பார்சலும் வந்துள்ள நிலையில், அதனை பிரித்து பார்த்த போது ஸ்மார்ட் போனுக்கு பதிலாக கல் ஒன்று இருந்துள்ளது.

ஆன்லைனில் ஸ்மார்ட் போன் ஆர்டர் போட்ட வாடிக்கையாளர்! வந்தது என்ன தெரியுமா? | Stone In A Parcel Smart Phone Customer Shocked

இதனால் போனை திருப்பி கொடுக்க நினைத்த போது குறித்த நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, அந்த வாடிக்கையாளர் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டதையடுத்து, குறித்த நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளதுடன், அவரது ஆர்டர் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.