தமிழ்சினிமாவில் சாதாரண துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங்கிங்கும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் லாக் டவுன் காலகட்டத்தில் அவ்வப்போது போட்டோக்கள் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட அதன் மூலம் தன்னுடைய ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
தற்போது அவரை இன்ஸ்டாக்ராமில் 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். மேலும் ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் அவருடைய போட்டோக்கள் எல்லாவற்றையும் நீக்கப்பட்டு வெறும் 7 போட்டோக்களை மட்டும் இருந்த நிலையில், அவருடைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் கேள்வியை எழுப்பத் தொடங்கினர்.
இதற்கு பதிலளித்த த்ரிஷா “ இந்த கொரோனா காலகட்டத்தில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் மன நிம்மதியுடன் இருக்க விரும்புவதாகவும்,
நான் சிறிது நாட்கள் சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பது தன் மனதிற்கு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்து இருந்தார். அதன் பின் சில வாரங்கள் கழித்து மீண்டும் அவர் சமூக வலைதளங்களுக்கு வருவதாக”தெரிவித்தார்.